சேத்துப்பட்டில் பனையம்மன் கோவில் தேர் திருவிழா
- பல்வேறு வண்ண மலர்களால் தேர் அலங்காரம்
- ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
சேத்துப்பட்டு:
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த பெரிய கொழப்ப லூர், கிராம தேவதையான பனையம்மன், கோவில் தேர் திருவிழா நடந்தது.
காலையில் பனையம்ம னை பல்வேறு மூலிகைகள் மூலம் அபிஷேகங்கள் செய்து, பல்வேறு வண்ண மலர்களால் அலங்காரம் செய்து வைத்துசிறப்பு பூஜைகள் செய்தனர்.
பின்னர் திருத்தேரை பல்வேறு வண்ண மலர்கள், வண்ணத்துணிகள், ஆகியவை மூலம் அலங்காரம் செய்து வைத்து வாழைமரம் மா இலை, நுங்கு, இளநீர், ஆகியவை தேரில் கட்டி வைத்து அலங்காரம் செய்தனர்.
பின்னர் உற்சவர் பனையம்மனை, திருத்தேரில் வைத்து 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் திருத்தேரை இழுத்தனர்.
பனையம்மன், திருத்தேர் பெரிய கொழப்பலூர், கிராமத்தில் உள்ள மாடவீதி வழியாக ஊர்வலம் வந்தது.முன்னதாக மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர், பாண்டுரங்கன், திருத்தேர் வடம் பிடித்து இழுத்து திருவிழாவை தொடங்கி வைத்தார்.
விழாவில் பெரணமல்லூர், ஒன்றிய குழு தலைவர் இந்திரா இளங்கோவன், ஒன்றிய குழு துணைதலைவர் லட்சுமி லலிதா, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் நித்திய பிரியா நடராஜன், மற்றும் முக்கிய பிரமுகர்கள் ஊர் பொதுமக்கள் சுற்றுப்புற கிராமத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருத்தேர் விழா ஏற்பாடுகளை.பெரண மல்லூர் ஒன்றிய குழு உறுப்பினர் காமாட்சி வெங்கடேசன், செய்திருந்தார்.