உள்ளூர் செய்திகள் (District)

திருவண்ணாமலை கோவிலில் பக்தர்கள் காவடியுடன் வீதி உலா

Published On 2023-01-30 08:48 GMT   |   Update On 2023-01-30 08:48 GMT
  • தை கிருத்திகை முன்னிட்டு நடந்தது
  • ஏராளமானோர் தரிசனம்

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை தை கிருத்திகையை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பெரிய நந்தி அருகில் உள்ள கோபுரத்திளையனார் சன்னதியில் அறுபடை முருக பக்தர்கள் குழு சார்பில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்யப்பட்டு நூற்றுக்கு மேற்பட்ட பக்தர்கள் புஷ்ப காவடியை எடுத்து மாட வீதியை உலா வந்தனர்.

இதேபோன்று திருவண்ணாமலை வட விதி சுப்பிரமணியர் சுவாமி கோவில், சோமாஸ்பாடி பாலமுருகர், கலசப்பாக்கம் அடுத்த எலத்தூர் மோட்டூர் நட்சத்திர சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், காஞ்சி பாலமுருகர், துரிஞ்சாபுரம் அடுத்த தேவனாம்பட்டு சிவசுப்பிரமணியர் சுவாமி கோவில்களில் தை கிருத்திகை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மகாதீபாரதனை செய்யப்பட்டனர்.

மேலும் கோவில்களில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News