செய்யாறில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்
- ஒ.ஜோதி எம்.எல்.ஏ. வழங்கினார்
- 7அரசு மேல்நிலைபள்ளிகளில் வழங்கினர்
செய்யாறு:
செய்யாறு டவுன், அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசினர் மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஒன்றியத்தில் நெடும்பிறை, வாழ்குடை, கொற்க்கை, முனுகப்பட்டு, பல்லி உள்ளிட்ட 7அரசு மேல்நிலைபள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டத்தின் கீழ் 1354 மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சிகளுக்கு செய்யாறு ஒன்றிய குழு தலைவர் நாவல் பாக்கம் பாபு தலைமை வகித்தார். நகர மன்ற தலைவர் மோகனவேல், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக ஒ.ஜோதி எம்.எல்.ஏ கலந்துகொண்டு 1354 மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிளை வழங்கி சிறப்புரையாற்றினர்.
நிகழ்ச்சியில் நகர செயலாளர் வழக்கறிஞர் கே விஸ்வநாதன், வழக்கறிஞர் அசோக், மாவட்ட சிறுபான்மை செயலாளர் வழக்கறிஞர் பாஷா, பள்ளி மேலாண்மை குழு தலைவர் சின்னதுரை, மற்றும் திமுக பிரமுகர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.