செய்யாற்றில் குடிநீர் கிணறுகளை ஜோதி எம்.எல்.ஏ. நேரில் ஆய்வு
- சரியான முறையில் குடிநீர் வழங்கவில்லை என்று குற்றச்சாட்டு
- சீரமைக்கும் பணியை விரைவாக முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்
செய்யாறு:
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தாலுக்கா, கீழ்ப்புதுப்பாக்கம் கிராமத்தில் கிராம சபை கூட்டத்தில் எம்.எல்.ஏ. ஜோதி பங்கேற்ற சமயத்தில் பொதுமக்கள் கீழ்புதுப்பாக்கம் பஞ்சாயத்தில் 6 மாத காலமாக சீரான முறையில் குடிநீர் வழங்கவில்லை என புகார் தெரிவித்தனர்.
கூட்டத்திலேயே எம்.எல்.ஏ.ஒ. ஜோதியும் விரைவாக, சீரான குடிநீர் வழங்க ஏற்பாடு செய்து தருவதாக உறுதி அளித்தார்.
அதன்படி கீழ் புதுப்பாக்கம் பஞ்சாயத்திற்கு குடிநீர் வழங்கும் நீர் ஆதாரமுள்ள வட தண்டலம் செய்யாற்றில் அமைந்துள்ள குடிநீர் கிணறுகளை எம்.எல்.ஏ. ஜோதி நேரில் சென்று ஆய்வு செய்தார்.
சேதமடைந்த பைப் லைன்களை சீரமைக்கும் பணியை விரைவாக முடிக்க ஊராட்சி நிர்வாகத்திற்கும் மற்றும் அரசு அலுவலர்களையும் அறிவுறுத்தினார்.
ஆய்வின் போது செய்யாறு ஒன்றிய குழு தலைவர் என். வி.பாபு, செய்யாறு நகர செயலாளர் வழக்கறிஞர் கே.விஸ்வநாதன், கவுன்சிலர் ஞானவேலு, மா.கி.வெங்கடேசன், ராம் ரவி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.