உள்ளூர் செய்திகள்
- சாலையை கடந்த போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
கண்ணமங்கலம்:
வேலூர் பாலமதியை சேர்ந்த கட்டிட மேஸ்திரி மணிகண்டன் (வயது 36) நேற்று காலையில் கேளூர் சந்தைமேட்டில் ரோட்டைக் கடக்க முயன்றார். அப்போது திருவண்ணா மலை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் மணிகண்டன் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே அடிபட்டு இறந்தார்.
இது குறித்து தகவலறிந்த சந்தவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.