உள்ளூர் செய்திகள் (District)

முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்த காட்சி.

முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2022-10-31 09:53 GMT   |   Update On 2022-10-31 09:53 GMT
  • கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது
  • ஏராளமான பக்தர்கள் தரிசனம்

செய்யாறு:

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே உள்ள சுண்டிவாக்கம் கிராமத்தில் பழமையான முத்து மாரியம்மன் கோவில் உள்ளது.

இக்கோவிலை ஊர் மக்கள் சார்பாக புதுப்பிக்கப்பட்டு நேற்று மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத 3 கால யாகசாலை பூஜை செய்து, பின்னர் யாகசாலையிலிருந்து சிவாச்சாரியார்கள் கலசங்களை சுமந்து கொண்டு மேள வாத்தியம் முழங்க வலம் வந்த சிவாச்சாரியார்கள் முத்து மாரியம்மன் கோவில் கோபுரத்தில் கலசத்தின் மீது புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.

நிகழ்ச்சியை காண சுற்று வட்டார கிராம மக்களும் திரளாக வந்து கலந்து கொண்டனர். விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News