உள்ளூர் செய்திகள்

வட்டார அளவிலான கலைத்திருவிழா

Published On 2022-12-01 09:49 GMT   |   Update On 2022-12-01 09:49 GMT
  • அண்ணாதுரை எம்.பி. தொடங்கி வைத்தார்
  • பல்வேறு போட்டிகள் நடந்தது

கீழ்பென்னாத்தூர்:

கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்தில் உள்ள பள்ளிகளில் கலைத்திருவிழா நடைபற்றது.

பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கான வட்டார அளவிலான போட்டிகள் கீழ்பென்னாத்தூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கியது. விழாவிற்கு, வட்டார கல்வி அலுவலர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார்.

மாவட்ட கவுன்சிலர் ஆராஞ்சி ஏ.எஸ்.ஆறுமுகம், ஒன்றிய குழு தலைவர் அய்யாக்கண்ணு, பேரூராட்சி தலைவர் சரவணன், கீழ்பென்னாத்தூர் ஒன்றிய ஆசிரியர் மற்றும் பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன கடன் சங்க தலைவர் செந்தில்குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆசிரியர் கூட்டுறவு சங்க துணை தலைவர் சி.ஏ.முருகன் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக சி. என்.அண்ணாதுரை எம்.பி கலந்துகொண்டு போட்டிகளை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில், பரதநாட்டியம், வயலின் இசை, பறை இசை, பேச்சு, ஓவியம், கட்டுரை போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.

போட்டிளில் மாணவர்கள் கலந்து கொண்டு கலை திறன்களை வெளிபடுத்தினர். விழாவில், வட்டார வளமைய பொறுப்பாளர்கள், கலை திருவிழா நிர்வாகிகள் பொய்யாமொழி, வேலு, வெங்கடேசன், அய்யாசாமி, முருகன், குமார், ஆசிரியர்கள், ஆசிரியைகள், மாணவ-மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கீழ்பென்னாத்தூர் ஒன்றிய அளவில் நடைபெறும் கலைத் திருவிழா போட்டிகள் வருகிற 5-ந்தேதி வரை நடைபெறும் என விழா குழுவினர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News