உள்ளூர் செய்திகள்
வீட்டில் பதுக்கிய போதை பொருட்கள் பறிமுதல்
- வாலிபர் கைது
- போலீசார் விசாரணை
வந்தவாசி:
வந்தவாசி அடுத்த அம்மையப் பட்டு பகுதி மீரஷா உசேன் நகர் சேர்ந்தவர் அப்துல் சமது (வயது 27) என்பவரின் வீட்டில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் குட்கா பான் மசாலா பொருட்கள் விற்பனை செய்வதாக வந்தவாசி தெற்கு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனைய டுத்து போலீசார் அங்கு சென்று சோதனை மேற்கொண்ட போது 7 மூட்டைகள் கொண்ட ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள தடை செய் யப்பட்ட ஹான்ஸ், குட்கா, பான் மசாலா உள்ளிட்ட பொருட் கள் இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அப்துல் சமதை கைது செய்து ஹான்ஸ் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.