உள்ளூர் செய்திகள்

டிராக்டர் கவிழ்ந்து பெண் பலி

Published On 2022-11-21 09:34 GMT   |   Update On 2022-11-21 09:34 GMT
  • பெண்கள் உட்பட 15 பேர் படுகாயம்
  • போலீசார் விசாரணை

திருவண்ணாமலை:

கலசப்பாக்கம் அடுத்த கடலாடி காலனி பகுதியைச் சேர்ந்தவர் சூர்யா (வயது 28) இவர் டிராக்டரில் டிப்பர் இணைக்கப்பட்டு அதன் மூலம் 15 பெண்களை ஏற்றிக்கொண்டு போளூர் அருகே உள்ள முருகாபாடி அடுத்த ஒகூர் பகுதியில் மஞ்சம் புல் அறுப்பதற்காக புறப்பட்டு சென்றுள்ளனர்.

அப்போது கடலாடியில் இருந்து போளூர் செல்லும் பைபாஸ் சாலையில் உள்ள வ.பேட்டை பெட்ரோல் பங்க் அருகே சென்று கொண்டிருந்தபோது டிராக்டரின் பின்புறம் இருந்த டிப்பர் திடீரென நிலை தடுமாறி தலைகீழாக சாலை ஓரம் கவிழ்ந்தது.இதில் அமர்ந்து வந்த 15 பெண்களும் சிக்கிக் கொண்டனர்.

அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகே உள்ள போளூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதில் பரமேஸ்வரி (50) சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

மேலும் டிரைவர் சூர்யா உட்பட 15 பெண்கள் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.

இது குறித்து கலசப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News