உள்ளூர் செய்திகள்
- உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்று திரும்பிய போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
செய்யாறு:
செய்யாறு அடுத்த நெடுங்கலை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரது மனைவி அஞ்சலை (வயது 56). இவர் நேற்று முன்தினம் தனது உறவினர் துக்க நிகழ்ச்சிக்கு புதூர்சென்று விட்டு இரவு 7 மணிக்கு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.
அப்போது நெடுங்கல் அரசு பள்ளி எதிரே வேகமாக வந்த பைக் மோதியதில் அஞ்சலை பலத்த காயம் ஏற்பட்டு படுகாயம் அடைந்தார்.
அருகில் இருந்தவர்கள் அஞ்சலியை மீட்டு செய்யாறு அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர்.
டாக்டர்கள் பரிசோதனை செய்து அவர் இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து அனக்காவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலு வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.