உள்ளூர் செய்திகள்

சாராயம் விற்ற பெண் கைது

Published On 2023-03-18 08:30 GMT   |   Update On 2023-03-18 08:30 GMT
  • குண்டர் சட்டத்தில் நடவடிக்கை
  • ஜெயிலில் அடைக்க கலெக்டர் உத்தரவு

போளூர்:

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் சாவடி தெருவை சேர்ந்த மனோகரன் மனைவி சாந்தி (வயது 60) என்பவர் கள்ளச்சாராயம் விற்பனையில் ஈடுபட்டு வந்ததார் போளூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் கைது செய்தனர்.

சாந்தி தொடந்த சட்டவிரோத செயலில் ஈடுபடாமல் இருக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் குண்டர் தடுப்பு சட்டத்தில் அவரை கைது செய்யுமாறு மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

இதன் அடிப்படையில் சாந்தியை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க கலெக்டர் உத்தரவிட்டார்.

Tags:    

Similar News