உள்ளூர் செய்திகள் (District)

உடுமலை பஞ்சலிங்க அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

Published On 2024-07-15 08:21 GMT   |   Update On 2024-07-15 08:21 GMT
  • சாரல் மழை காலை முதல் குறிப்பிட்ட இடைவெளியில் விட்டு விட்டு பெய்து வந்தது.
  • தளி, அமராவதி பகுதியில் காலை முதல் மாலை வரை அவ்வப்போது சாரல் மழை பெய்தது.

உடுமலை:

திருப்பூர் மாவட்டம் உடுமலை, அமராவதி, மடத்துக்குளம் பகுதியில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. நேற்று காலை உடுமலை பகுதியில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

பின்னர் சாரல் மழை விட்டு விட்டு பெய்தது. இதனால் குளிர் வாட்டி வதைத்தது. குளிர்ந்து காற்று வீசியது. சாரல் மழை காலை முதல் குறிப்பிட்ட இடைவெளியில் விட்டு விட்டு பெய்து வந்தது.

இதே போன்று தளி, அமராவதி பகுதியில் காலை முதல் மாலை வரை அவ்வப்போது சாரல் மழை பெய்தது. இதன் காரணமாக திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் இன்று காலை நீர்வரத்து அதிகரித்தது. தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியதால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

Tags:    

Similar News