தமிழ்நாடு (Tamil Nadu)
தி.மு.க. இளைஞரணி பேச்சுப்போட்டி நிறைவு நிகழ்ச்சி தள்ளிவைப்பு- உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு
- தி.மு.க. இளைஞர் அணி நடத்தும் ‘என் உயிரினும் மேலான’ பேச்சுப்போட்டி மாவட்ட மற்றும் மண்டல அளவில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது.
- மாநில அளவிலான இறுதிப்போட்டி மற்றும் பரிசளிப்பு விழா தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும்.
சென்னை:
தி.மு.க. இளைஞரணி செயலாளர், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு, தி.மு.க. இளைஞர் அணி நடத்தும் 'என் உயிரினும் மேலான' பேச்சுப்போட்டி மாவட்ட மற்றும் மண்டல அளவில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது.
மாநில அளவிலான இறுதிப் போட்டி நாளை (19-ந்தேதி) அன்றும், பரிசளிப்பு விழா முதலமைச்சர் தலைமையில் நாளை மறுநாள் (20-ந்தேதி) அன்றும் சென்னையில் நடைபெறும் என்று அறிவித்திருந்தோம்.
தமிழ்நாடு முழுவதும் கனமழை பெய்துள்ள சூழலில் போட்டியாளர்களின் நலன் கருதி, இரு நிகழ்ச்சிகளையும் ஒத்தி வைத்துள்ளோம். மாநில அளவிலான இறுதிப்போட்டி மற்றும் பரிசளிப்பு விழா தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.