உள்ளூர் செய்திகள்
சிவகிரி அருகே மரக்கன்றுகள் நடும் விழா
- சப்-இன்ஸ்பெக்டர் சஜிவ், வேல்கேர் மருத்துவமனை டாக்டர் மணிகண்டன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
- விழாவில் 80 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது.
சிவகிரி:
சிவகிரி அருகே விஸ்வநாதபேரி ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே அரசுக்கு சொந்தமான அரசு புறம்போக்கு நிலத்தில் வருவாய்த்துறை சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. சிவகிரி சப்-இன்ஸ்பெக்டர் சஜிவ், வேல்கேர் மருத்துவமனை டாக்டர் மணிகண்டன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
சப்-இன்ஸ்பெக்டர் சஜிவ், டாக்டர் மணிகண்டன், வருவாய் ஆய்வாளர் சரவணகுமார், கிராம நிர்வாக அலுவலர் சங்கரவடிவு, தலையாரி வேல்முருகன், ஊராட்சி மன்ற தலைவர் ஜோதி மணிகண்டன் ஆகியோர் சுமார் 80 மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். இதில் வார்டு கவுன்சிலர்கள், அலுவலர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.