உள்ளூர் செய்திகள் (District)
துறையூரில் 34-வது சாலை பாதுகாப்பு வார விழா
- துறையூரில் 34-வது சாலை பாதுகாப்பு வார விழா நடைபெற்றது
- வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கபட்டது
துறையூர்:
திருச்சி மாவட்டம் துறை–யூரில் தமிழக அரசின் போக்குவரத்துத் துறை சார்பில் 34-வது சாலை பாதுகாப்பு வார விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தில் குமார் தலைமை தாங்கி–னார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு போக்குவரத்து விதிமுறை–கள் பற்றியும், விதி மீற–லுக்கான அபராதம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் ஹெல்மெட் அணி–வதின் அவசியம் மற்றும் சாலை விபத்துகள் பற்றிய குறும் படம் காட்சிப்ப–டுத்தப்பட்டன. அத்துடன் வாகன ஓட்டு–னர்களுக்கு போக்குவரத்து விதிமுறைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டது. இந்நி–கழ்ச்சி–யில் அலுவலக பணி–யாளர்கள், ஓட்டுநர் பயிற்சி பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்ட–னர்.