உள்ளூர் செய்திகள் (District)

தொட்டியம் அருகே விஷப்பூச்சி கடித்து 4 வயது சிறுமி பலி

Published On 2023-02-12 09:56 GMT   |   Update On 2023-02-12 09:56 GMT
  • தொட்டியம் அருகே விஷப்பூச்சி கடித்து 4 வயது சிறுமி பலியானார்
  • இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகி–ன்றனர்.

திருச்சி:

திருச்சி மாவட்டம் தொட் டியம் அருகே உள்ள அரசலூர் கைகாட்டி பகுதி–யைச் சேர்ந்தவர் பாலகிருஷ் ணன். இவரது மனைவி அம்பிகா (வயது 36). இந்த தம்ப–தியரின் மகள் அனுஸ்ரீ (4). இந்த சிறுமி சக குழந் தைகளுடன் அந்தப் பகுதி–யில் உள்ள விவசாய தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக ஒரு விஷப்பூச்சி அனுஸ்ரீயை கடித்துள்ளது. இதில் சிறுமிக்கு கடுமையான வலி ஏற்பட்டது. பின்னர் வீடு திரும்பிய அவர் அழுது–கொண்டே பெற்றோ–ரிடம் கூறியுள்ளார்.அதற்குள் சிறுமியின் உடலில் விஷ தன்மை ஏறியுள்ளது. உடனடியாக பெற்றோர் மகளை மீட்டு தொட்டியம் அரசு மருத்து–வமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நாமக்கல் மற்றும் சேலம் அரசு ஆஸ் பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருந்த போதிலும் சிகிச்சை பலன் அளிக்காமல் சேலம் அரசு மருத்துவமனையில் அந்த சிறுமி பரிதாபமாக இறந்துவிட்டார். இது தொடர்பாக அவரது தாய் அம்பிகா தொட்டியம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகி–ன் றனர்.

Tags:    

Similar News