உள்ளூர் செய்திகள் (District)

திருச்சியில் அரிவாளால் வெட்டப்பட்ட அரிசி ஆலை உரிமையாளர் சாவு-கொலை வழக்காக மாற்றம்

Published On 2022-12-30 10:18 GMT   |   Update On 2022-12-30 10:41 GMT
  • சம்ப–வம் குறித்து பாலக்கரை போலீ–சார் கொலை வழக்காக பதிவு செய்துள்ளனர்.
  • பாலக்கரை மேம்பாலத்தின் மையப்பகுதியில் வைத்து வழிம–றித்து தலை மற்றும் உடல் உள்ளிட்ட பல்வேறு பகு–திகளில் சரமாரியாக வெட்டினர்.

திருச்சி:

திருச்சி பீமநகர் யானைக் கட்டி மைதானம் பகுதி–யைச் சேர்ந்தவர் சிவனேசன் (வயது 55). உறையூர் பகு–தியில் அரிசி ஆலை வைத்துள்ளார். சில தினங்க–ளுக்கு முன்பு இவர் தனது வீட்டிலிருந்து பாலக்கரை நோக்கி இருசக்கர வாக–னத்தில் சென்றுள்ளார். அவரைப் பின்தொடர்ந்து 2 இருசக்கர வாகனங்களில் சென்ற 6 பேர், பாலக்கரை மேம்பாலத்தின் மையப் பகுதியில் வைத்து வழிம–றித்து தலை மற்றும் உடல் உள்ளிட்ட பல்வேறு பகு–திகளில் சரமாரியாக வெட்டினர்.தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிவனேசனை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து பாலக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வந்தனர். பின்னர் தேவேந்தி–ரகுல வேளாளர் அமைப்பைச் சேர்ந்த திருச்சி மாவட்டம் லால்குடி நடராஜபுரத்தை சேர்ந்த கலைபுலி ராஜா (27) தஞ்சாவூர் சேர்ந்த வீரமணி (26) முசிறியை சேர்ந்த அமர்நாத் (24) மண்ணச்சநல்லூர்ரை சேர்ந்த பரமகுரு (22) மங்கானத்தை சேர்ந்த மணிகண்டன் (22) ஆகிய ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.மேலும் சென்னையை சேர்ந்த நவீன் (25) என்பவரை தேடி வருகின்றனர். இந்த நிலையில் மருத்துவமனை–யில் சிகிச்சை பெற்று வந்த சிவனேசன் சிகிச்சை பலன–ளிக்காமல் இன்று பரிதாபமாக இறந்தார். இதையடுத்து சம்ப–வம் குறித்து பாலக்கரை போலீ–சார் கொலை வழக்காக பதிவு செய்துள்ளனர்.


Tags:    

Similar News