உள்ளூர் செய்திகள் (District)
திருச்சி தில்லை நகரில் தனியார் நிறுவன ஊழியர் மயங்கி விழுந்து சாவு
- திருச்சி தில்லை நகரில் தனியார் நிறுவன ஊழியர் மயங்கி விழுந்து பலியானார்
- இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
திருச்சி:
ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் புதுத் தெருவை சேர்ந்தவர் சரவணன் ( வயது 42). இவர் தில்லை நகரில் உள்ள ஒரு தனியார் மெத்தை கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று கம்பெனியில் இருந்த சரவணன் திடீரென்று மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இந்த சம்பவம் குறித்து தில்லை நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.