உள்ளூர் செய்திகள்

தா.பேட்டையில் வருமுன் காப்போம் மருத்துவமுகாம்

Published On 2022-07-23 09:31 GMT   |   Update On 2022-07-23 09:31 GMT
  • மக்களுக்கு மருத்துவ குழுவினர் பொது மருத்துவம், எலும்பு. கண், காது, மூக்கு, தொண்டை, ரத்தம், ரத்தஅழுத்தம், சர்க்கரையின் அளவு, உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கான சிகிச்சைகளையும், பரிசோதனைகளையும் செய்தனர்
  • முகாமில் 460க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சிகிச்சை பெற்றனர்.

திருச்சி :

தா.பேட்டை அருகே பாப்பாபட்டி கிராமத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

முகாமிற்கு தா.பேட்டை ஒன்றிய குழு துணைத்தலைவர் மல்லிகா பெரியசாமி தலைமை வகித்து தொடங்கி வைத்தார். திமுக ஒன்றிய செயலாளர் கே.கே.ஆர்.சேகரன், கே.பெரியசாமி, மாவட்ட துணைச் செயலாளர் எம்.மயில்வாகனன், நிர்வாகி பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஒன்றிய ஆணையர்கள் ஆர்.மனோகரன், ஆர்.பி.குணசேகரன், மாவட்ட கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி, ஊராட்சி மன்ற தலைவர் மல்லிகா ஜெகநாதன், துணைத் தலைவர் சந்திரசேகரன் ஆகியோர் மருத்துவ முகாமின் நோக்கம் குறித்து பேசினர்.

முகாமில் மக்களை தேடி மருந்து பெட்டகங்கள் வழங்கபட்டது. வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.குமரேஷ் தலைமையிலான மருத்துவ குழுவினர் பொது மருத்துவம், எலும்பு. கண், காது, மூக்கு, தொண்டை, ரத்தம், ரத்தஅழுத்தம், சர்க்கரையின் அளவு, உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கான சிகிச்சைகளையும், பரிசோதனைகளையும் செய்தனர். முகாமில் 460க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சிகிச்சை பெற்றனர்.

முடிவில் ஊராட்சி செயலர் ஜெயராஜ் நன்றி கூறினார்.

Tags:    

Similar News