- வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்த போது தீண்டியது
- மருத்துவமனை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்
திருச்சி,
திருச்சி அருகே உள்ள சுண்ணாம்பு காரன்பட்டி பள்ளக்காடு பறைக்கலம் பகுதியைச் சேர்ந்தவர் பூபதி. இவரது மகன் வர்ஷன் (வயது 6).இந்த சிறுவன் பிராட்டியூர் அரசு நடுநிலைப் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான்.நேற்று முன்தினம் பள்ளி முடிந்து வீடு திரும்பிய அந்த சிறுவன் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தான்.அப்போது அவனை ஒரு பாம்பு கடித்து விட்டது.அடுத்த நொடி அச்சிறுவன் வலியால் கதறி அழுதபடி மயங்கி விழுந்தான். உடனே பெற்றோர்கள் அவனை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.இருந்தபோதிலும் சிறுவனை காப்பாற்ற இயலவில்லை.சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக வர்ஷன் இறந்து விட்டான். இது குறித்து அவனது தந்தை பூபதி சோமரசம்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.