உள்ளூர் செய்திகள் (District)

கல்லூரி மாணவி காதலனுடன் ஓட்டம்

Published On 2023-01-17 07:47 GMT   |   Update On 2023-01-17 07:47 GMT
  • அதிகாலை வீட்டில் இருந்து மாயமானார்
  • மணப்பாறை போலீசார் தேடி வருகின்றனர்

திருச்சி,

திருச்சி மணப்பாறை பகுதியை சேர்ந்த 18 வயது இளம் பெண் ஒருவர் ஆலத்தூரில் உள்ள ஒரு தனியார் கலை அறிவியல் கல்லூரியில் பி.காம்., சி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வருகிறார். பொங்கல் விடுமுறையில் வீட்டில் இருந்த அந்த மாணவி அதிகாலையில் திடீரென வீட்டில் இருந்து மாயமானார். மகளைப் பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் ஏலமனம் சீதாப்பட்டி பகுதியைச் சேர்ந்த பாலகுமார் என்பவரை அந்த மாணவி காதலித்து வந்தது தெரியவந்தது. இதனால் அவருடன் ஓட்டம் பிடித்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த வாலிபரும் மாணவி பயிலும் அதே கல்லூரியில் பி காம் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இது தொடர்பாக மாணவியின் தந்தை மணப்பாறை போலீசில் புகார் செய்தார்.அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News