உள்ளூர் செய்திகள்

காங்கிரசார் ரயில் மறியல் போராட்டம்

Published On 2023-03-26 08:19 GMT   |   Update On 2023-03-26 08:19 GMT
  • ராகுல் காந்தி எம்.பி.பதவி பறிப்பு கண்டித்து ரயில்வே ஜங்ஷனில் நடைபெற்றது
  • மாநிலத் தலைவர் லெனின் பிரசாத் உட்பட 50 பேர் கைது

திருச்சி,

அவதூறு வழக்கில் நீதிமன்றத்தில் தண்டனை விதிக்கப்பட்ட ராகுல் காந்தியின்நாடாளுமன்ற உறுப்பினர் பதவி அதிரடியாக பறிக்கப்பட்டது. இதனைக் கண்டித்து நாடு முழுவதும் கட்சியினர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ராகுல் காந்தி எம்.பி பதவியை பறித்த மத்திய பாரதிய ஜனதா அரசை கண்டித்து திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் விச்சு என்கிற லெனின் பிரசாத் தலைமையில் திரண்டனர்.பின்னர் அவர்கள் ரயில் நிலையத்துக்குள் புகுந்து ரயிலை மறித்து தண்டவாளத்தில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.அதைத்தொடர்ந்து காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் லெனின் பிரசாத்,மாவட்டத் துணைத் தலைவர் முரளி,மாவட்ட பொதுச் செயலாளர்கள் வில்ஸ் முத்துக்குமார், ஜி.எம்.ஜி.மகேந்திரன்,கோட்டத் தலைவர் சிவாஜி சண்முகம்,மாநில இளைஞர் காங்கிரஸ் செயலாளர் சரவணன் சுப. சோமு,இளைஞர் காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சந்திரன், பீம நகர் காசிம், மாநில ஒருங்கிணைப்பாளர் ஆர்.டி.பிரிவு பி.எம். ஆர் தினேஷ் மற்றும் ஹரிஷ் பிரபு,செந்தூர் வாசன்,பஜார் மைதீன்,மன்சூர், திருச்சி ஜங்ஷன் கோட்டத் தலைவர் பிரியங்கா பட்டேல், திருச்சி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் ஸ்ரீ ராகவேந்திரா,உறையூர் கீரைகொல்லை சக்கரபாணி, திருச்சி இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.மோகன், காத்துமுத்து, மணிகண்டன், நாகமங்கலம் சீனிவாசன், திருச்சி வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் பிரபாகரன், லால்குடி தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் லியோ ஸ்டான்லி, கலைப்பிரிவு மார்க்கெட் கணேஷ், கிஷோர்,சுசீந்திரன், சசிகுமார், திருச்சி வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் ஜெயபிரகாஷ், வடக்கு மாவட்ட இளைஞரணி தினேஷ் சத்யராஜ், மணப்பாறை சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராம் பிரகாஷ் ,உறையூர் வீரா, பிரியங்கா பட்டேல்,லால்குடி தொகுதி இளைஞர் காங்கிரஸ் நகரச் செயலாளர் பாபு, ஜெயராஜ், ரமேஷ், லால்குடி பிரகாஷ் , திருச்சி கலைப்பிரிவு சண்முகம், உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட காங்கிரசார் கைது செய்யப்பட்டனர்.

Tags:    

Similar News