திருச்சி அரசு மருத்துவமனையில் சிறப்பு படுக்கை வசதிகளுடன் கொரோனா சிறப்பு வார்டு
- திருச்சி அரசு மருத்துவமனையில் சிறப்பு படுக்கை வசதிகளுடன் கொரோனா சிறப்பு வார்டு அமைக்கபட்டுள்ளது
- மருத்துவமனை டீன் நேரு மருத்துவ குழுவினருடன் ஆய்வு செய்தார்.
திருச்சி:
திருச்சி அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு படுக்கை வசதிகளுடன் கூடிய கொரோனா நோயாளிகளுக்கான அறையை மருத்துவமனை டீன் நேரு மருத்துவ குழுவினருடன் ஆய்வு செய்தார். அப்போது, கொரோனா அதிகரித்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.பின்னர் அவர் கூறுகையில், உடனடியாக நோயாளிகளை அனுமதிக்கும் வகையில் 40 படுக்கை வசதிகள் உள்ளது.
தேவையான அளவு ஆக்சிஜன் கான்சென்டரேட்டர்கள், 25,000 பி.பி.இ. கிட், 120 வெண்டிலேட்டர்கள் மற்றும் தேவையான அளவு மருந்துகள் கையிருப்பில் உள்ளது, கொரோனாவை எதிர் கொள்ளும் வகையில் தயார் நிலையில் உள்ளோம்.குறைந்த அளவு கொரோனா நோயாளிகள் தற்போது சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்றைய தினம் எட்டு பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர் மேலும் தினசரி 317 பேர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது, கொரோனா எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் பரிசோதனையும் தீவிர படுத்தப்படும் என்றார்.