உள்ளூர் செய்திகள் (District)

பெண் என்ஜினியர் மர்ம சாவு

Published On 2022-11-19 10:05 GMT   |   Update On 2022-11-19 10:05 GMT
  • பெண் என்ஜினியர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்
  • கர்ப்பமாக இருந்தார்

திருச்சி

திருச்சி கே.கே. நகர் அம்மன் நகரை சேர்ந்தவர் பிரதீப் ராஜ். இவரது மனைவி சந்தியா (வயது 23). என்ஜினியர். இவருடைய கணவர் பிரதீப் ராஜ் பெங்களூரில் உள்ள தனியார் கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சந்தியா அருகில் உள்ள அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்றிருந்தார். அப்போது சந்தியாவிற்குமயக்கம் வந்துள்ளது. இதையடுத்து அவரது பெற்றோர் அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சந்தியாவை பரிசோதனை செய்து பார்த்த டாக்டர் சந்தியா கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தார்.மேலும் உடல் நிலைக்கு வேறு எந்பாதிப்பும் இல்லை என்றும் கூறினார். இந்த நிலையில் கே கே நகர் அம்மன் நகரில் உள்ள வீட்டில் தனியாக இருந்த சந்தியாவிற்கு திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டு உள்ளது .இதையடுத்து அவரை ஆபத்தான நிலையில் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்ற சந்தியா திடீரென இறந்து போனார். இந்த சம்பவம் குறித்து சந்தியாவின் தந்தை வெள்ளைச்சாமி கண்டோன்மென்ட் அனைத்து மகளிர் போலீசில் கொடுத்தார்.புகாரின் பேரில் போலீசார் மர்ம சாவு என வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News