செங்காட்டுப்பட்டியில் நூலக வார விழா
- செங்காட்டுப்பட்டியில் நூலக வார விழா நடைபெற்றது
- வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.
திருச்சி:
திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் செங்காட்டுப்பட்டி கிளை நூலக வாசகர் வட்டம் நடத்திய, 55- வது தேசிய நூலக வார விழா, செங்காட்டுப்பட்டி அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் புத்தக கண்காட்சி மற்றும் ஊக்குவிப்பு பயிற்சி, கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.
தமிழ் ஆசிரியர் அனந்தராமன் வரவேற்றார், பள்ளி தலைமை ஆசிரியை கற்பகம் தலைமை ஏற்று புத்தக கண்காட்சி திறந்து வைத்தார். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் பாஸ்கர் சிறப்புரை வழங்கினார். வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் ரங்கநாதன் ஏற்புரை வழங்கினார். கட்டுரைப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கி பேராசிரியர் வைரமணி வாழ்த்துரை வழங்கினார்.
விழாவில் பள்ளியில் இருபால் ஆசிரியர் பெருமக்கள் கலந்து கொண்டனர் வாசகர் வட்ட தலைவர் ராமராஜன், பள்ளி மாணவ மாணவிகள், ஊர்முக்கிய பிரமுகர்கள் செல்லமுத்து, பெரியசாமி செல்வராஜ் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர் இந்நிகழ்ச்சியில் செங்காட்டுப்பட்டி கிளை நூலகர் கார்த்திகேயனிடம் ரூ.1000/- வழங்கி புதிய புரவலராக சிலம்பரசன் இணைந்தார். இறுதியாக கீரம்பூர் கிளை நூலகர் நூர் அஹமத் நன்றி கூறினார்.