உள்ளூர் செய்திகள்

திருச்சி மாவட்டத்தில் கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை

Published On 2023-01-27 07:47 GMT   |   Update On 2023-01-27 07:47 GMT
  • திருச்சி மாவட்டத்தில் கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை நடந்தது
  • 71 பேர் கைது-942 மதுபாட்டில்கள் பறிமுதல்

திருச்சி:

குடியரசு தின விழாவை முன்னிட்டு நேற்று தமிழக முழுவதும் அனைத்து அரசு டாஸ்மாக் மதுபான கடைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனாலும் அதனை கண்டு–கொள்ளாமல் முன்ன–தாகவே ஒரு சிலர் மது–பானங்களை வாங்கி பதுக்கி வைத்துக் கொண்டு சட்ட–விரோதமாக கள்ளச்சந்தை–யில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்தனர். திருச்சி மாநகரில் டாஸ் மாக் மதுபான கடைக–ளுக்கு அருகாமையில் நின்று கொண்டு மது பிரியர்க–ளுக்கு விரும்பிய மது பாட்டில்களை விற்பனை செய்தனர். ஒரு பாட்டிலுக்கு அளவுக்கு ஏற்ப ரூ.50 முதல் ரூ.200 வரை விலை கூடுதல் விலை நிர்ணயம் செய்து விற்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து திருச்சி மாநகர போலீசார் ஆங்காங்கே ரோந்து சென்று சட்டவிரோதமாக மதுபானங்களை விற்பனை செய்த 31 பேரை கைது செய்தனர். அவர்கள் வசம் இருந்து 280 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.இதேபோன்று திருச்சி புறநகர் பகுதியில் முசிறி மற்றும் திருவெறும்பூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் மது வேட்டையில் இறங்கினர். இதில் 38 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 40 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 662 மதுபான பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

இதில் மணிகண்டம் நடுப்பாகலூர் பகுதியில் வீட்டில் பாண்டிச்சேரி மதுபான பாட்டில்கள் பதுக்கிய ஜெயராமன் (வயது 37) என்பவரை திருச்சி மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு முத்தரசு, இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா மற்றும் தனிப்படை போலீ–சார் கைது செய்தனர். அவரி–டமிருந்து 180 பாண்டிச்சேரி மதுபான பாட்டில்கள் பறி–முதல் செய்யப்பட்டது. திருச்சி மாநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சட்டவிரோத மது விற்பனை வெளிப்படையாக நடந்தது அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருந்தது.

Tags:    

Similar News