உள்ளூர் செய்திகள்

உப்பிலியபுரம் அருகே மாராடி வரதராஜ பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேகம்

Published On 2023-05-25 07:20 GMT   |   Update On 2023-05-25 07:20 GMT
  • உப்பிலியபுரம் அருகே மாராடி வரதராஜ பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது
  • திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்

உப்பிலியபுரம்,

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரத்தை அடுத்துள்ள மாராடியில் சுமார் 700 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ பூமி நீளாதேவி, ஸ்ரீபெருந்தேவித்தாயார் சமேத ஸ்ரீ வரதராஜப்பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு புதிதாக ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் சயனாதி வாசம், பள்ளி கொண்ட ரெங்கநாதர், ஆஞ்சநேயர் கருடன் , விமானம், நூதன உற்சவ மூர்த்திகள் ஆலய விமானம் நிறுவப்பட்டது.

இதையடுத்து புதிய பிம்ப பிரதிஷ்டையை அடுத்து ஸ்ரீசுதர்ஸன ஹோமம், லஷ்மி ஹோமம், சங்கல்பம், வாஷ்து ஹோமம், யாகசாலை, பூர்ணாகுதி, திருக்குடங்களுடன் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. சுற்றியுள்ள கிராம மக்கள் ஆயிரக்கணக்கில் திரளாக கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். துறையூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் உப்பிலியபுரம் சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரகாஷ், செபாஷ்டின் சந்தியாகு, பாலமுருகன், இளங்கோவன் மற்று்ம் 20 போலீசார் பாதுகாப்பு பணியினில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News