உள்ளூர் செய்திகள் (District)

மோட்டார் சைக்கிள் திருடிய சிறுவன்

Published On 2023-02-14 08:12 GMT   |   Update On 2023-02-14 08:12 GMT
கைது செய்யப்பட்ட சிறுவன் காப்பகத்தில் அடைப்பு

திருச்சி,

திருச்சி நவல்பட்டு அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் புஷ்பராஜ் செல்லையா (வயது 50). இவர் தனது மோட்டார் சைக்கிளை வழக்கம்போல் வீட்டின் முன்பு நிறுத்தி விட்டு இரவு சாப்பிட்டு தூங்கினார். அப்போது நள்ளிரவில் மர்ம ஆசாமி ஒருவர் அந்த மோட்டார் சைக்கிளை திருடி சென்று விட்டார். இது தொடர்பாக புஷ்பராஜ் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவன் மோட்டார் சைக்கிளை திருடியது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அந்த சிறுவனை போலீசார் கைது செய்து திருச்சியில் உள்ள காப்பகத்தில் அடைத்தனர்.

Tags:    

Similar News