உள்ளூர் செய்திகள் (District)

மக்களைத் தேடி மாநகராட்சி குறைதீர்க்கும் முகாம்

Published On 2022-09-28 09:52 GMT   |   Update On 2022-09-28 09:52 GMT
  • மக்களைத் தேடி மாநகராட்சி குறைதீர்க்கும் முகாம் நடந்தது
  • மேயர் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார்

 திருச்சி:

திருச்சி மாநகராட்சி மண்டலம் 3 -ல் மக்களைத் தேடி மாநகராட்சி குறைதீர்க்கும் முகாம் காட்டூர் கைலாஷ்நகரில் உள்ள சந்தோஷ் மஹாலில் நடைபெற்றது. இந்த முகாமில். மாநகராட்சி மேயர் அன்பழகன் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் துணை மேயர் திவ்யா, மண்டல குழுத் தலைவர் மதிவாணன், நகரப் பொறியாளர் சிவபாதம், துணை ஆணையர் தயாநிதி, உதவி செயற்பொறியாளர் ஜெகஜீவன்ராம், உதவி வருவாய் அலுவலர் தாமோதரன், பாதுகாப்பு திட்ட தனி ஆட்சியர் அண்ணாதுரை, வருவாய் ஆய்வாளர்கள் ரமேஷ், பாலமுருகன், சமூக கவுன்சிலர்கள் கோவிந்தராஜன், ரெக்ஸ், கே.கே.கே.கார்த்திக், கொட்டப்பட்டு ரமேஷ், தாஜுதீன், செந்தில், சிவக்குமார், சுரேஷ், சீத்தாலட்சுமி முருகானந்தம், பியூலா ராஜமாணிக்கம் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

முகாமில் பயனாளிகளுக்கு கட்டிட அனுமதி, சொத்துவரி , பெயர் மாற்றம், பிறப்பு சான்றிதழ், இறப்பு சான்றிதழ்களையும் உள்ளிட்ட ஆணைகளை இன்று வழங்கினார்.

Tags:    

Similar News