உள்ளூர் செய்திகள் (District)
மருத்துவமனை வளாகத்தில் மூதாட்டி சாவு
- மருத்துவமனை வளாகத்தில் மூதாட்டி இறந்து கிடந்தார்
- எந்த ஊரை சேர்ந்தவர் என்று விசாரணை
திருச்சி:
திருச்சி அரசு பொது மருத்துவமனையில் உள்ள பழைய தீவிர சிகிச்சை பிரிவு வார்டு அருகே அடையாளம் தெரியாத 60 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மயங்கி கிடப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மருத்துவமனை ஊழியர்கள் அவரை மீட்டு சோதனை செய்த போது அவர் உயிரிழந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.