உள்ளூர் செய்திகள் (District)
கல்லக்குடி அருகே பேருந்து மோதி முதியவர் பலி
- கல்லக்குடி அருகே பேருந்து மோதி முதியவர் பலியானார்
- திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் ஓட்டுனராக வேலை பார்த்து வருகின்றார்.
டால்மியாபுரம்:
திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் கல்லக்குடி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் சேகர். இவர் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் ஓட்டுனராக வேலை பார்த்து வருகின்றார். இந்நிலையில் திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் பெரியார் நினைவு சமத்துவபுரம் அருகே சென்று கொண்டிருந்த பொழுது திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து அவர் மீது மோதியது. இதில் சேகருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து லால்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சேகர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கல்லக்குடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.