உள்ளூர் செய்திகள் (District)

ஆட்டோ கவிழ்ந்து மூதாட்டி சாவு

Published On 2022-10-11 09:22 GMT   |   Update On 2022-10-11 09:22 GMT
  • ஆட்டோ கவிழ்ந்து மூதாட்டி உயிரிழந்தார்
  • டயர் வெடித்தால் விபரீதம்

திருச்சி

திருச்சி திண்டுக்கல் ரோடு கோரிமேடு பகுதியைச் சேர்ந்தவர் அபூபக்கர். இவரது மனைவி அவ்வாபி (வயது 73). இவரும், இவரது உறவினர் சபீர் அகமது மனைவி பரீதா ( 43) ஆகியோர் அவ்வாபீவியின் மகன் இலியாஸ் அகமதுவின் ஆட்டோவில் திருச்சி திண்டுக்கல் சாலையில் சென்று கொண்டிருந்தனர். ஆட்டோ கருமண்டபம் பகுதியில் உள்ள ஒரு கல்லூரி அருகே சென்றபோது முன்பக்க டயர் வெடித்து கவிழ்ந்தது. இதில் அவ்வாபீ பரிதாபமாக உயிரிழந்தார். இதில் பரீதாவும், ஆட்டோ டிரைவர் இலியாஸ் அகமதுவும் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து திருச்சி போக்குவரத்து புலனாய்வு பிரிவு தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அஜீம் வழக்கு பதிந்து ஆட்டோவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்

Tags:    

Similar News