உள்ளூர் செய்திகள் (District)
- இரு சக்கர வாகனம் மீது பஸ் மோதியது
- வாகன விபத்தில் மூதாட்டி பலியானார்
திருச்சி
திருச்சி கொட்டப்பட்டு ஜே.கே.நகரை சேர்ந்தவர் தங்கவேல். இவர் தனது உறவினர் வள்ளி (வயது 70) என்பவருடன் திருச்சி ஒத்தக்கடையில் இருந்து டி.வி.எஸ். டோல்கேட் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.தலைமை தபால் நிலையம் காந்தி சிலை அருகே சென்றபோது அடையாளம் தெரியாத பஸ் இவர் மீது மோதியது. இதில் மூதாட்டி வள்ளி படுகாயம் அடைந்தார். உடனே அவரை திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக வள்ளி இறந்தார்.இது குறித்து அவரது உறவினர் காமாட்சி கொடுத்த புகாரின் அடிப்படையில் திருச்சி போக்குவரத்து புலனாய்வு பிரிவு தெற்கு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.