உள்ளூர் செய்திகள் (District)

கலைத்திருவிழா போட்டியில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் வாய்ப்பு

Published On 2022-11-23 10:01 GMT   |   Update On 2022-11-23 10:01 GMT
  • கலைத்திருவிழா போட்டியில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும்
  • தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்

திருச்சி:

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலத் தலைவர் குணசேகரன், பொதுச் செயலாளர் வி. எஸ்.முத்துசாமி, மாநில பொருளாளர் சே. நீலகண்டன் ஆகியோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பி உள்ள ஒரு கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது;-

தமிழகத்தில் படிக்கின்ற மாணவர்களின் திறமையை வெறும் கல்வி சார்ந்து மட்டும் அளவிடாமல் கலை மற்றும் பண்பாடு சார்ந்து அவர்களுக்குள் உள்ள திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் கலைத் திருவிழாவை நடத்த மீண்டும் உத்தரவிட்ட தமிழக அரசுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அதே வேளையில் தமிழக அரசின் உதவி பெறும் பள்ளிகளில் சுமார் 11 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர்.

இவர்கள் தமிழ் வழி பாடப் புத்தகத்தையும் ,தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி தமிழ் வழி ஆசிரியர் பயிற்சி முறைகளையும் பின்பற்றி படித்து வருகின்றனர். ஆகவே இவர்களும் கலை விழாவில் பங்கு பெற்று திறமைகளை வெளிப்படுத்த தமிழக அரசு வாய்ப்பு வழங்க வேண்டும்.

தமிழ் வழியில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவம், பொறியியல் கல்வியில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அவை தமிழக அரசின் உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களும் பயனடைகின்ற வகையில் வழங்கிட வேண்டும்.மேலும் 6 முதல் 12 ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்து உயர்கல்வி செல்லும் மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் மாதம் ரூ. 1000 வழங்கப்படுகிறது.

இந்தத் திட்டத்திலும் உதவி பெறும் பள்ளி மாணவிகளுக்கும் வாய்ப்பினை வழங்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News