உள்ளூர் செய்திகள்

துவாக்குடி பகுதிக்கு கூடுதல் பஸ்கள் இயக்க கோரிக்கை

Published On 2022-12-22 09:26 GMT   |   Update On 2022-12-22 09:26 GMT
  • துவாக்குடி பகுதிக்கு கூடுதல் பஸ்கள் இயக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
  • திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து

திருச்சி :

திருச்சி மாவட்ட விமன் இந்தியா மூவ்மென்ட் செயற்குழு கூட்டம் பாலக்கரையில் நடைபெற்றது. மண்டல செயலாளர் மெஹராஜ் பானு, மாவட்ட தலைவர் மூமினா பேகம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஷமினா பர்வின், செயலாளர் சூபேரியா பானு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் திருச்சி மாநகரின் பெரும்பாலான பகுதிகளில் பாதள சாக்கடை திட்டத்தை செயல்படுத்துவதற்காக தோண்டப்பட்ட குழிகளால் பொதுமக்கள் பெரும் துன்பத்திற்கும், சிரமத்திற்கும் ஆளாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே தெருக்கள் மற்றும் சாலைகளை உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் சீரமைக்க வலியுறுத்தி கேட்டுக் கொள்வது,திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து துவாக்குடி வரை செல்லும் பேருந்து எண்-128 பேருந்துக்கு 1 மணி நேரம் முதல் 2 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டி உள்ளது. ஆகவே குறுகிய கால இடைவெளியில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இந்த கோரிக்கைகள் தொடர்பாக கலெக்டர் மற்றும் போக்குவரத்துத் துறை அதிகாரிகளுக்கு மனு அளிக்கவும் முடிவு செய்யப்பட்டது.

Tags:    

Similar News