உள்ளூர் செய்திகள் (District)

கல்லூரி பேராசிரியர் மீது மாணவி பாலியல் புகார் - சமூக வலைதளத்தில் பரவும் தகவலால் பரபரப்பு

Published On 2022-08-18 10:11 GMT   |   Update On 2022-08-18 10:11 GMT
  • திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் ஆங்கிலத்துறை தலைவராக இருக்கும் பேராசிரியர் ஒருவர் முதுகலை மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் எழுந்துள்ளது.
  • பேராசிரியர் மற்றும் பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு அதன் அறிக்கை உயர்கல்வித்துறை இயக்குனருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

திருச்சி, ஆக.18-

திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் ஆங்கிலத்துறை தலைவராக இருக்கும் பேராசிரியர் ஒருவர் முதுகலை மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் எழுந்துள்ளது. இந்தப் பேராசிரியர் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த கல்லூரியில் பணியாற்றி வருகிறார்.

அவர் எம்.ஏ. மற்றும் ஆராய்ச்சி படிப்பு படிக்கும் பி.எச்.டி. மாணவிகளை குறிவைத்து பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதில் பாதிக்கப்பட்ட ஒரு மாணவி கல்லூரி முதல்வரிடம் புகார் அளித்தார். இது தொடர்பாக அவர் விசாரணைக்கு முற்பட்டபோது மேலிட செல்வாக்கை சொல்லி மிரட்டியதாக கூறப்பட்டது.

இதையடுத்து முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு அந்த மாணவி புகார் அனுப்பினார். அதன் அடிப்படையில் கல்லூரி முதல்வர் தலைமையில் விசாரனை கமிட்டி அமைத்து விசாரணை நடத்தும்படி அறிவுறுத்தப்பட்டது. அதன்படி பேராசிரியர் மற்றும் பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு அதன் அறிக்கை உயர்கல்வித்துறை இயக்குனருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த அறிக்கை அனுப்பப்பட்டு 20 நாட்களுக்கு மேலாகியும் சம்பந்தப்பட்ட பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என சமூக வலைதளங்களில் பரபரப்பான தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News