உள்ளூர் செய்திகள் (District)
- முதியவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்
- மயங்கி கீழே விழுந்தார்
திருச்சி:
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அள்ளூர் பகுதியை சேர்ந்தவர் அன்னக்காமு(வயது58). இவரது தந்தை செல்லமுத்து(80) கடந்த 6ம் தேதி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வந்துள்ளார். அங்கு வந்த அவர் திடீரென மயங்கி கீழே விழுந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்நிலையில் நேற்று அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.இது குறித்து வழக்கு பதிவு செய்த ஸ்ரீரங்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.