உள்ளூர் செய்திகள் (District)

போட்டோகிராபர் மயங்கி விழுந்து சாவு

Published On 2022-11-21 08:12 GMT   |   Update On 2022-11-21 08:12 GMT
  • போட்டோகிராபர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
  • கிரகப்பிரவேச விழாவுக்கு சென்ற போது சம்பவம்

திருச்சி

திருச்சி உறையூர் குழு–மணி மெயின் ரோடு சுப்பி–ரமணியர் நகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் குமார் (வயது 50). போட்டோகிரா–பரான இவர் திருச்சி சன்னா–சிப்பட்டியில் நடைபெற்ற புதிய வீடு கிரகப்பிரவேச விழாவுக்கு புகைப்படம் எடுக்கச் சென்றார்.

இந்த நிலையில் அங்குள்ள பாத்ரூமில் சுரேஷ்குமார் மயங்கி விழுந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு சுரேஷ்குமார் ஏற்க–னவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது தொடர்பாக அவரது மனைவி ஜோதி ராம்ஜி நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News