உள்ளூர் செய்திகள் (District)

தீக்குளித்த இளம் பெண் மூச்சு திணறி சாவு

Published On 2022-11-23 10:11 GMT   |   Update On 2022-11-23 10:11 GMT
  • தீக்குளித்த இளம் பெண் மூச்சு திணறி உயிரிழந்தார்
  • உதவி கலெக்டர் விசாரணை செய்து வருகிறார்

திருச்சி:

சென்னை சூளை திடீர் நகர் கண்ணப்பா திடல் பகுதியைச் சேர்ந்தவர் பாலன்.இவரது மகள் ஷர்மிளா (வயது 24). இவருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் கிருஷ்ணபுரம் நடுத்தெரு பகுதியைச் சேர்ந்த நாகராஜ் என்பவருக்கும் கடந்த 2018 ல் பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமண நடந்தது. பின்னர் சர்மிளா கணவருடன் வசித்து வந்தார். இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே திடீர் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து சர்மிளா தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்தார். உறவினர்கள் அவரை மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவரது பெற்றோர் மகளை சென்னைக்கு அழைத்துச் சென்று அங்குள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். அதன் பின்னர் கடந்த 7ம் தேதி ஆஸ்பத்திரியில் இருந்து ஷர்மிளா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் அவருக்கு திடீர் மூச்சு திணறல் ஏற்பட்டது. உறவினர்கள் அவரை திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இவருக்கு திருமணம் ஆகி நான்கு ஆண்டுகள் மட்டுமே ஆவதால் உதவி கலெக்டர் விசாரணை செய்து வருகிறார். மேலும் காந்தி மார்க்கெட் உதவி போலீஸ் கமிஷனர் சுந்தரமூர்த்தியும் விசாரணை நடத்தி வருகின்றார்.இது தொடர்பாக கோட்டை அனைத்து மகளிர் 

Tags:    

Similar News