இருசக்கர வாகனம் மரத்தில் மோதி விவசாயி பலி
- இருசக்கர வாகனம் மரத்தில் மோதி விவசாயி பலியானார்
- இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராம்ஜி நகர்:
திருச்சி சோமரசம்பேட்டை அருகே உள்ள கொய்யா தோப்பு கிராமம் புலியூரான் காடு பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி இவரது மகன் தெய்வமணி (வயது 30) விவசாயி. இவருக்கு திருமணம் ஆகி மீனா என்ற மனைவியும் குழந்தைகளும் உள்ளன. இந்நிலையில் தெய்வமணி தனது இருசக்கர வாகனத்தில் வியாழன் மேடு சென்று பின்னர் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். போசம்பட்டி என்ற இடத்தில் வந்தபோது இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரத்தில் இருந்த மரத்தில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட தெய்வமணி படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் மயங்கினார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே தெய்வமணி இறந்து விட்டதாக கூறினர். இந்ந விபத்து குறித்து சோமரசம்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் தனிப்பிரிவு காவலர் ரகுராம் ஆகியோர் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.