- சிறுமி படுகாயத்துடன் சிகிச்சைக்கு அனுமதி
- முசிறி அருகே திண்ணகோணத்தில் துயரம்
முசிறி,
முசிறி அருகே திண்ணகோணம் கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் பெரியக்காள் (வயது 60). விவசாயக் கூலி தொழிலாளி. தற்சமயம் அதே ஊரில் வசிக்கும் உறவினர் இளையராஜா என்பவரின் வீட்டில் பெரியக்காள் வாழ்ந்து வந்தார்.இந்நிலையில் நேற்று அப்பகுதியில் உள்ள சூரியகாந்தி தோட்டத்தில் பெரியக்காள் 7 பெண்களுடன் விவசாய வேலை செய்துள்ளார். அப்போது திடீர் என்று இடி, மின்னலுடன் மழை பெய்தது. இதனால் விவசாய பணி செய்து கொண்டிருந்த பெண்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல முற்பட்டனர்.
ஆனால் அதற்குள் அப்பகுதியை இடி, மின்னல் தாக்கி உள்ளது. மின்னல் தாக்கியதில் பெரியகாள் சம்பவ இடத்திலேயே இறந்து போனார். மேலும் அதே ஊரைச் சேர்ந்த ரோகினி (15) என்ற சிறுமிக்கு காயம் ஏற்பட்டுள்ளது. மற்ற 5பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.இடி மின்னல் தாக்கியதில் பெண் பலியான சம்பவம் குறித்து அப்பகுதியினர் முசிறி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பெயரில் முசிறி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பெரியக்காள் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்வதற்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பெண் கூலி தொழிலாளி இடி மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.