உள்ளூர் செய்திகள்

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை தி.மு.க. தொண்டர்கள் குடும்ப விழாவாக கொண்டாட வேண்டும் -பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் சரவணன் வேண்டுகோள்

Published On 2022-11-27 09:36 GMT   |   Update On 2022-11-27 09:36 GMT
  • 3 தினங்களாக கொண்டாடப்பட்டு பொது மக்களுக்கு நலதிட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றது.
  • குடும்ப விழாவாக சிறப்பாக கொண்டாடுமாறு அனைவரையும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

பாப்பிரெட்டிப்பட்டி,

பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் பி.எஸ்.சரவணன் தலைமையில் மேற்கு ஒன்றியத்தில் உள்ள அனைத்து கிளை கழகங்கள் சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் சிறப்பாக கடந்த 3 தினங்களாக கொண்டாடப்பட்டு பொது மக்களுக்கு நலதிட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றது.

இதையொட்டி பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் பி.எஸ்.சரவணன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தி.மு.க. தலைவர்,தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலினின் ஆசியோடும்,தருமபுரி மாவட்ட பொறுப்பு அமைச்சரும்,தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலன்துறை அமைச்சருமான எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் நல் வாழ்த்துக்களுடனும், தருமபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளரும்,முன்னாள் அமைச்சருமான பி.பழனியப்பன் ஆலோசனைபடி கழக இளைஞர் அணி செயலாளரும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு கிளை கழகங்கள் தோறும் கட்சியின் கொடியினை ஏற்றியும் ஏழை, எளிய மக்கள்,மாணவ,மாணவியர்கள்,முதியவர்கள்,மாற்று திறனாளிகள் பயன்பெறும் வகையில் நலதிட்ட உதவிகள் வழங்கி குடும்ப விழாவாக சிறப்பாக கொண்டாடுமாறு அனைவரையும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு பி.எஸ்.சரவணன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News