உள்ளூர் செய்திகள்

மருத்துவ முகாம் நடந்தது.

திட்டச்சேரியில், வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்

Published On 2023-01-24 08:52 GMT   |   Update On 2023-01-24 08:52 GMT
  • மக்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
  • சுமார் 750-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

நாகப்பட்டினம்:

திட்டச்சேரி அரசினர் மேல்நிலை பள்ளியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் வட்டார அளவிலான கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடைபெற்றது.

முகாமை செல்வராஜ் எம்.பி. தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பேசினார். சுகாதார பணிகள் துணை இயக்குனர் விஜயகுமார் முன்னிலை வகித்தார். மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு வல்லுனர் லியாக்கத் அலி வரவேற்றார்.

முகாமில் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, காது, மூக்கு, தொண்டை மருத்துவம், கண் சிகிச்சை, எலும்பு சிகிச்சை, மகப்பேறு சிகிச்சை, தோல் நோய் சிகிச்சை தொடர்பான சிறப்பு மருத்துவர்கள் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்து வரவழைக்கப்பட்டு மக்களுக்கு பரிசோதனை மற்றும் சிகிச்சை அளித்தனர்.

முகாமில் திட்டச்சேரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 750-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

இதில் காசநோய் பிரிவு துணை இயக்குனர் சங்கீதா, தொழுநோய் பிரிவு துணை இயக்குனர் சங்கரி, பள்ளியின் தலைமை ஆசிரியர் கலாராணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார சுகாதார மேற்பார்வை–யாளர் கற்பகம் நன்றி கூறினார்.

Tags:    

Similar News