குலசேகரன்பட்டினம் கோவிலில் 31-ந் தேதி வருசாபிஷேகம்
- கச்சி விநாயகர் கோவிலிருந்து பால்குடம் எடுத்து வீதி உலா வரப்படுகிறது.
- பகல் 12 மணிக்கு சிறப்பு அன்னதானம் நடைபெறுகிறது.
உடன்குடி:
உடன்குடி அருகேயுள்ள குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுடன் இணைந்த அறம் வளர்த்தநாயகி கோவில் பழமை வாய்ந்த கோவிலாகும். இது தென் மாவட்டங்களில் முக்கிய கோவில்களில் ஒன்றாகும்.
இக்கோவிலில் வருகிற 31-ந் தேதி வருசாபிஷேக விழா நடக்கிறது. இதை முன்னிட்டு 31-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 6மணிக்கு யாகசாலை பூஜைகள், பல்வேறு மந்திரங்கள் ஒதபடும். காலை 7மணிக்கு கச்சி விநாயகர் கோவிலிருந்து பால்குடம் எடுத்து வீதி உலா வந்து கோவிலுக்கு வருதல். காலை 9மணி முதல் நண்பகல் 12மணிக்குள் மூலஸ்தான சுவாமி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், கும்பாபிஷேகம், சிறப்பு அலங்காரம், மகேஸ்வர பூஜை, உச்சிக்கால தீபாராதனை ஆகியவை நடக்கிறது. பகல் 12மணிக்கு சிறப்பு அன்னதானம், இரவு 7மணிக்கு சிறப்பு திரு விளக்கு பூஜை, இரவு 7.30 மணிக்கு சிறப்பு அலங்காரம் அர்ச்சனை, கற்பூர ஆராத்தி, இரவு 8.30மணிக்கு உற் சவமூர்த்திக்கு சோடாச உபசார தீபாராதனை, இரவு 9மணிக்கு சுவாமி அம்மன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வருதல் நடக்கிறது.
ஏற்பாடுகளை தக்கார் சங்கர், செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன், வருசாபிஷேக சிறப்பு கட்டளைதாரர்கள், குலசேகரன்பட்டினம் சைவ வேளாளர் பெருமக்கள் செய்து வருகின்றனர்.