உள்ளூர் செய்திகள் (District)

வேளாங்கண்ணி சி.பி.எஸ்.இ. பள்ளியில் பொங்கல் விழா

Published On 2023-01-14 09:04 GMT   |   Update On 2023-01-14 09:04 GMT
  • கூத்தரசன் தலைமை தாங்கி பொங்கல் விழாவை தொடங்கி வைத்தார்.
  • விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளியின் ஆசிரியர்கள், மாணவர்கள் செய்திருந்தனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி வேளாங்கண்ணி சி.பி.எஸ்.இ. பள்ளியில் சங்கமம் 2023 பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதற்கு பள்ளியின் தாளாளர் கூத்தரசன் தலைமை தாங்கி பொங்கல் விழாவை தொடங்கி வைத்தார்.

பள்ளி முதலவர் அசோக் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக ஓசூர் வேளாங்கண்ணி பள்ளி முதல்வர் ராஜேந்திரன், அறிஞர் அண்ணா கலை கல்லூரியின் முதல்வர் தனபால், பொறியாளர் சரவணன் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

விழாவில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் தொழில் முறை நாட்டுப்புற கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களை கொண்டு தப்பாட்டம், பொய்க்கால் குதிரை, கோலாட்டம், தவில், நாதஸ்வரம், மயிலாட்டம் போன்ற நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

பெற்றோர்களுக்கு தனியாக கயிறு இழுத்தல், உரி அடித்தல், கோலப்போட்டி, சாக்குப்பை ஓட்டம், நடனம் ஆகிய போடடிகள் நடத்தப்பட்டு பங்கேற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. முடிவில் விழாவில் பங்கேற்ற பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கு விருந்து அளிக்கப்பட்டது. பொங்கல் விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளியின் ஆசிரியர்கள், மாணவர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News