வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் சிறப்பு முகாமில் 18,229 பேர் விண்ணப்பம்
- பொதுமக்கள் ஆர்வமுடன் விண்ணப்பித்தனர்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் 651 வாக்குச்சாவடி மையங்களில் கடந்த 12, 13 ஆகிய தேதிகளில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சிறப்பு முகாம் நடந்தது. ஏராளமானவர்கள் வாக்குச்சாவடி மையங்களுக்கு சென்று விண்ணப்பித்தனர். நேற்று முன்தினம் மற்றும் நேற்றும் சிறப்பு முகாம் நடைபெற்றது. நேற்று நடந்த முகாமுக்கு பொதுமக்கள் பலர் ஆர்வமுடன் சென்று பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் செய்ய விண்ணப்பித்தனர்.
கடந்த 12-ந் தேதி நடந்த முகாமில் 4,370 பேரும், 13-ந் தேதி நடந்த முகாமில் 5,884 பேரும் விண்ணப்பங்கள் அளித்திருந்தனர். நேற்று முன்தினம் நடந்த முகாமில் பெயர் சேர்த்தலுக்கு 1,016 பேரும், நீக்கம் செய்ய 197 பேரும், திருத்தம், முகவரி மாற்றம், புதிய வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பித்தலுக்கு 731 பேரும் என மொத்தம் 2,944 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
நேற்று நடந்த முகாமில் பெயர் சேர்க்க 3276 மனுக்களும் நீக்கம் செய்ய 420 திருத்தம் முகவரி மாற்றம் புதிய வாக்காளர் அட்டை பெறுவதற்கு 1435 பேர் என மொத்தம் 5031 விண்ணப்பம் பெறப்பட்டன.
இதுவரை நடந்த 4 சிறப்பு முகாம்களில் 18,229 பேர் விண்ணப்பம் அளித்துள்ளனர்.