உள்ளூர் செய்திகள்

கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது

Published On 2023-07-16 09:01 GMT   |   Update On 2023-07-16 09:01 GMT
  • 40 போதை மாத்திரைகள் பறிமுதல்
  • ஜெயிலில் அடைப்பு

அணைக்கட்டு:

பள்ளிகொண்டா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடி அருகே கையில் பையுடன் நீண்ட நேரமாக 2 பேர் நின்று கொண்டிருந்துள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பள்ளிகொண்டா போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணகரன் தலைமை யிலான போலீசார் விரைந்து சென்று சந்தேகத்தின் பேரில், 2 பேரையும் பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள் பள்ளிகொண்டா பகுதியை சேர்ந்த சீனிவாசன் (வயது 26) மற்றும் தீபக் (34) என்பதும், இவர்கள் 2 பேரும் ஆந்திர மாநிலத்தில் கீழ் திருப்பதியில் இருந்து மேல் திருப்பதிக்கு ஜீப் ஓட்டும் கூலி வேலை செய்து வந்தனர். இவர்கள் திருப்பதியில் இருந்து கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை கடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சா, போதை ஊசி மற்றும் 40 போதை மாத்திரைகள் உள்ளிட்ட வைகளை பறிமுதல் செய்தனர் . கைது செய்யப்பட்ட 2 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, ஜெயிலில் அடைக்க ப்பட்டனர்.

Tags:    

Similar News