உள்ளூர் செய்திகள்

எல்லையம்மன் கோவிலில் 2-வது நாள் தெப்பல் உற்சவம்

Published On 2023-08-19 08:20 GMT   |   Update On 2023-08-19 08:20 GMT
  • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்
  • அம்மன் திருவீதி உலா நடந்தது

அணைக்கட்டு:

வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவாணம் பகுதியில் மிகவும் சிறப்பு மிக்க எல்லையம்மன் கோவில் உள்ளது.

இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி முதல் வெள்ளி தொடங்கி தொடர்ந்து 9 வாரங்கள் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் திருவிழா நடைபெறுவது வழக்கம், அதன்படி இந்த ஆண்டும் வெள்ளி மற்றும் ஞாயிறுகிழமைகளில் நடக்கும் திருவிழாக்களில் ஏராளமான பக்தர்கள் குவிந்து பொங்கல் வைத்து ஆடு, கோழிகளை படையலிட்டு வழிபாடு செய்கின்றனர்.

விழாவின் முக்கிய நிகழ்வான தெப்பல் உற்சவம் நேற்று முன்தினம் தொடங்கியது.

2-வது நாளான நேற்று எல்லையம்மன் மாவடி சேவை அலங்காரத்தில் எழுந்தருளி, 5 முறை குளத்தை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனை தொடர்ந்து அம்மன் திருவீதி உலா நடந்தது.

சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலர் நரசிம்மாமூர்த்தி மற்றும் கணக்காளர் சரவணபாபு, மணியம் முரளி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News