உள்ளூர் செய்திகள்

செல்போனில் மூழ்கிய பேத்திக்கு அறிவுரை வழங்க வேண்டும்

Published On 2023-05-03 08:25 GMT   |   Update On 2023-05-03 08:25 GMT
  • எஸ்.பி. அலுவலகத்தில் தாத்தா புகார்
  • போலீசாரை அனுப்பி வழி ஏற்படுத்தி தருவதாக உறுதி

வேலூர்:

வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் தலைமையில் இன்று நடந்தது.

குடியாத்தத்தை சேர்ந்த வெங்கடேசன் என்ற மாற்றுத்திறனாளி மனு அளித்தார்.

அதில் என்னுடைய மனைவி அதே பகுதியை சேர்ந்த ஒருவருடன் கடந்த 10 ஆண்டுகளாக கள்ளக்காதலில் ஈடுபட்டு வருகிறார் இதனை தட்டி கேட்டால் கொலை மிரட்டல் விடுக்கின்றனர்.

எனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் மேலும் கொலை மிரட்டல் விடுத்தவர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தார்.

இதேபோல் தொரப்பாடியை சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சுப்ரமணி கொடுத்த மனுவில் எனது மகன் வழி பேத்திக்கு 26 வயது ஆகிறது.

அவர் எந்த வேலைக்கும் செல்லாமல் எப்போதும் செல்போனிலேயே மூழ்கிக் கிடக்கிறார். அவருக்கு அறிவுரை வழங்க வேண்டும் என தெரிவித்தார்.

வேலூர் அடுத்த மூஞ்சூர்பட்டை சேர்ந்த ரவி என்பவர் கொடுத்த மனுவில் தனது வீட்டிற்கு செல்லும் பாதையில் மரங்களை வெட்டி போட்டு ஆக்கிரமிப்பு செய்து உள்ளனர்.

அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார். உடனடியாக போலீசாரை அனுப்பி வழி ஏற்படுத்தி தருவதாக உறுதி அளித்தனர்.

Tags:    

Similar News