குடியாத்தம் போலீஸ் நிலையத்தில் மாணவிகளுக்கு விழிப்புணர்வு
- பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விளக்கம்
- 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
குடியாத்தம்:
வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் உத்தரவின் பேரில் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி மேற்பார்வையில் குடியாத்தம் தாலுகா போலீஸ் நிலையத்தில் மாணவிகளுக்கான பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு குடியாத்தம் அடுத்த உள்ளி கிராமம் அருகே உள்ள தனியார் மெட்ரிகுலேசன் பள்ளியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் கணபதி, சப்-இன்ஸ்பெக்டர்கள் சிலம்பரசன், நெடுஞ்செழியன், பயிற்சி சப் இன்ஸ்பெக்டர் தாரா உள்ளிட்ட போலீஸ் காவல் துறையில் பெண்கள் பாதுகாப்பு குறித்த சட்ட பிரிவுகள் குறித்து மாணவிகளிடம் சட்ட புத்தகத்தை கொடுத்து வாசிக்க வைத்தனர். மேலும் சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதில் தொடர்ந்து மாணவிகளுக்கு காவல்துறையின் அன்றாட பணிகள் குறித்தும், பெண்கள் பாதுகாப்பு சட்டங்களை எடுத்துக் கூறியும் விரிவாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.